இன்றயை உலகில் பல்வேறு தரப்பினர்களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் மொபைல் இயங்குதளங்கள் தான் தனது சர்வதிகாரத்தை காட்டி வருகின்றன.
மொபைல் போன் சந்தையில் பொதுவமாக கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குளத்தையே பயன்படுத்தி வருகின்றன மற்ற நிறுவனங்கள். தங்களுக்கு என்று தனி இயங்குதளம் கூட இல்லாமல் இருக்கின்றன.
இதுவரை கூகுள் நிறுவனத்தின் இருந்து, ஆண்ட்ராய்டு இயங்குளத்தை ஹூவாய் நிறுவனமும் பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக போர் ஏற்பட்டது. அப்போது, அமெரிக்காவின் எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கூடாது என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக சீனா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இதனால், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்துவதை நிறுவத்துவதாக அறிவித்தது.
உலகில் தொலைத் தொடர்பு மற்றும் 5 ஜி சேவைகளையும், செல்போன்களையும் விற்று வரும் ஹூவாய் முன்னணியாக திகழ்கின்றது.
இந்நிலையில், அதிபர் டிரம்புக்குக்கும் கூகுள் நிறுவனத்தை எதிர்த்தும் சொந்தமாக இயங்குளத்தை உருவாக்க முனைப்பு காட்டியது. மேலும், கூகுள் நிறுவனம் சிறிது காலம் தனது ஹூவாயிக்கு இயங்குதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
புதிய இயங்குதளம் HongmengOS என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகின. சீனாவின் Dongguan நகரத்தில் நடந்த டெவலப்பர் மாநாட்டில் தனது புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்தது ஹூவாவே.
2 மாதம் குறைவான காலத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது
இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் புதிய இயங்குதளம் ஹார்மனி (HarmonyOS) என்று உருவாக்கி சாதித்திருக்கிறது ஹுவாய்.
சீனாவில் HongmengOS என்ற பெயரிலேயே வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூவாய், போன்களுக்கு மட்டுமல்ல தற்போது ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தி வரும் அனைத்து போன்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
தடையற்ற, மென்மையான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த அனுபவத்தை ஹார்மனி கொடுக்கும் என ஹூவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IoT எனப்படும் தொழில்நுட்பத்தை கருத்தில்கொண்டு, இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்சுகள், டி.வி-க்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்து விதமான ஸ்மார்ட் கேட்ஜெட்களிலும் இதைப் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டைப் போலவே இதுவும் ஓப்பன் சோர்ஸ் இயங்குதளம் என்பதால், யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு வேளை ஆண்ட்ராய்டைப் பயன்படுத்துவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஹார்மனிக்கு மிக எளிதாக நாங்கள் மாறிக்கொள்வோம். ஒன்று அல்லது இரண்டு தினங்களில் அதைச் சுலபமாகச் செய்துவிட முடியும்" என தெரிவித்திருக்கிறார், வாவே நுகர்வோர் வணிகக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூ செங்டாங் (Yu Chengdong).
HTML5, லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய தளங்களில் உருவாக்கப்படும் ஆப்களை ஹார்மனி ஏற்றுக்கொள்ளும்.
உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு. தற்போது ஆண்ட்ராய்டு இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறலாம்.
ஆண்ட்ராய்டு சந்தைக்குள் நுழைந்து 10 ஆண்டை கடந்துள்ளது.
எந்த நிறுவனமும் ஆண்ட்ராய்டுடன் போட்டி போட முடியாத நிலையில் இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குளத்திலும் கலக்குகின்றது.
இந்நிலையில், தற்போது, தனக்கென்று கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கும் பாய் சொல்லி, டிரம்ப்க்கும் அல்லா கொடுத்து வந்து விட்டது ஹூவாய் நிறுவனத்தின் இயங்குளதம்.