நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும் வரை தான் நாம் பாதுகாப்பான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் சில சமயங்களில் நமது நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருப்பதில்லை. சில நேரங்களில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்கள், திசுக்கள் செயல்பட வேண்டிய வழியில் செயல்படாது. இப்படி அடிக்கடி செயல்பட ஆரம்பித்தால், அப்போது அலர்ஜி, ஆஸ்துமா அல்லது தோலழற்சி போன்றவை ஏற்படலாம்.
இல்லாவிட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் உடலுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட உடலை தாக்க ஆரம்பித்துவிடும். இதனால் ஆட்டோ-இம்யூன் குறைபாடுகளான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் அல்லது டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்படக்கூடும். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டல பிரச்சனைகளால் குறைந்தது 80 வகையான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவை அனைத்துமே உடலினுள் அழற்சியை உண்டாக்குபவைகள். ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனைகள் இருந்தால், அது ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும்.
இக்கட்டுரையில் அந்த எச்சரிக்கை அறிகுறிகள் தான் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.